வாரா வாரம் கோவிலுக்கு போவேங்க.. மதுரை மீனாட்சி கோவிலை செப்பனிட நடவடிக்கை- பழனிவேல் தியாகராஜன் பளிச்
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
தாத்தா காலத்தில் கும்பாபிஷேகம்
மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குடும்பத்திற்குமான உறவு நீண்ட நெடியது. 1963 ஆம் ஆண்டில், பழனிவேல் தியாகராஜன் தாத்தா பி.டி.ராஜன், மீனாட்சியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் செய்தார். புதுப்பிக்கப்பட்ட கோவிலில் தான் அதைச் செய்யும் வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறார் பழனிவேல் தியாகராஜன்.
Comments
Post a Comment